ஆசிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டி: முதல் முறையாக வெற்றி பெற்ற இந்திய அணி


ஆசிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டி: முதல் முறையாக வெற்றி பெற்ற இந்திய அணி
x
தினத்தந்தி 13 April 2022 1:41 AM GMT (Updated: 13 April 2022 1:41 AM GMT)

சவுதி அரேபியாவில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் மும்பை கிளப் அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.

சவுதி அரேபியா:

40 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் மும்பை சிட்டி எப்.சி. (இந்தியா) அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஏர் போர்ஸ் கிளப்பை (ஈராக்) தோற்கடித்தது.

மும்பை அணியில் 70-வது நிமிடத்தில் டியாகோ மவுரிசியோவும், 75-வது நிமிடத்தில் ராகுல் பெகேவும் கோல் அடித்தனர். இந்த போட்டியில் இந்திய கிளப் ஒன்று வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Next Story