75-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை பந்தாடியது மேற்கு வங்கம்!


75-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை பந்தாடியது மேற்கு வங்கம்!
x
தினத்தந்தி 16 April 2022 10:34 AM GMT (Updated: 16 April 2022 10:34 AM GMT)

தொடக்க ஆட்டத்தில் மேற்கு வங்கம் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது.

திருவனந்தபுரம்,

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கியது.

2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில், 32 முறை கோப்பையை கைப்பற்றிய மேற்கு வங்க அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. 

இந்த தொடக்க ஆட்டத்தில் மேற்கு வங்கம் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், குரூப்-ஏ பிரிவில் உள்ள கேரளா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இப்போட்டி, மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் நடைபெறுகிறது.

Next Story