ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி..!


ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி..!
x

image courtesy: Odisha FC twitter

இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி-ஒடிசா அணிகள் மோதின.

புவனேஸ்வர்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி-ஒடிசா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஒடிசா அணி சார்பில் வாஃபா ஆட்டத்தின் 31-வது நிமிடத்திலும் டியாகோ 49-வது நிமிடத்திலும் நந்தகுமார் 90+7-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

சென்னை அணி சார்பில் கயாட்டி ஆட்டத்தின் 60-வது நிமிடத்திலும் 90+4-வது நிமிடத்திலும் என இரண்டு கோல்கள் அடித்தார். இதையடுத்து ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story