சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி


சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 27 Jun 2018 9:45 PM GMT (Updated: 27 Jun 2018 7:27 PM GMT)

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.

பிரிடா,

37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனுமான ஆஸ்திரேலியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டு இருந்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் லாச்லன் ஷார்ப் 6-வது நிமிடத்திலும், கிரேக் டாம் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 15-வது நிமிடத்திலும், மிட்டென் டிரென்ட் 33-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் வருண்குமார் 10-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 58-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள். இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்-1 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story