தென் மண்டல ஆக்கி: எஸ்.டி.ஏ.டி. அணி 2-வது வெற்றி


தென் மண்டல ஆக்கி: எஸ்.டி.ஏ.டி. அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 23 April 2019 11:17 PM GMT (Updated: 23 April 2019 11:17 PM GMT)

தென் மண்டல ஆக்கி போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணி 2-வது வெற்றியை ருசித்தது.


சென்னை,

செயின்ட் பால்ஸ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் லயோலா-புதுச்சேரி கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லயோலா அணியில் சூர்யாவும், புதுச்சேரி அணியில் தமிழ்வேந்தனும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. (கோவில்பட்டி) அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜி.எஸ்.டி. (சென்னை) அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் வருமான வரி-அசோக் அகாடமி (மாலை 3 மணி), இந்தியன் வங்கி-தெற்கு ரெயில்வே (மாலை 4.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story