சர்வதேச ஆக்கி: இந்திய ஆண்கள் அணி தோல்வி


சர்வதேச ஆக்கி: இந்திய ஆண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 18 Aug 2019 11:18 PM GMT (Updated: 18 Aug 2019 11:18 PM GMT)

சர்வதேச ஆக்கி போட்டியில், இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் சர்வதேச ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 4 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில் தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை துவம்சம் செய்த இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் நியூசிலாந்தை சந்தித்தது. 2-வது நிமிடத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். ஆனால் பிற்பகுதியில் மீண்டெழுந்த நியூசிலாந்து 47 மற்றும் 60-வது நிமிடங்களில் கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்தது.

பெண்கள் பிரிவில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் ஒரு கட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் 59-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் கோல் அடித்து இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

Next Story