சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா


சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா
x
தினத்தந்தி 18 Oct 2019 11:43 PM GMT (Updated: 18 Oct 2019 11:43 PM GMT)

சுல்தான் கோப்பை ஆக்கியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.

ஜோஹர் பாரு,

9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் ஷிலானந்த் லக்ரா, மன்தீப் மோர், ஷர்தா நந்த் திவாரி ஆகியோர் கோல் அடித்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் அதன் பிறகு மீண்டு வந்து தோல்வியில் இருந்து தப்பியது.

லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 10 புள்ளியுடன் 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்துடன் மீண்டும் மோதுகிறது.

Next Story