லாக் டவுன் என்பது சுய பிரதிபலிப்புக்கான ஒரு வாய்ப்பு - ஹர்மன்பிரீத் சிங்
லாக் டவுன் என்பது சுய பிரதிபலிப்புக்கான ஒரு வாய்ப்பு என ஹர்மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.
பெங்களூரு,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஆக்கி அணியும், பெண்கள் ஆக்கி அணியும் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த முறை ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இவ்விரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
கொரோனா அச்சம் ஒரு பக்கம் கலங்கடித்தாலும் இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சிக்கு பாதிப்பு இல்லை.
பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க இங்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதே போல் உரிய அங்கீகார அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் ஆக்கி முன்னணி வீரர் ஹர்மன்பிரீத்சிங் கூறியதாவது:-
விளையாட்டில் சில குறைபாடுகளை பிரதிபலிக்கவும் சரிசெய்யவும் இந்த லாக் டவுன் அவகாசம் அளிப்பதாக உள்ளது. லாக் டவுன் என்பது சுய பிரதிபலிப்புக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த காலகட்டத்தை எனது வாழ்க்கையில் இடைநிறுத்தப்பட்ட பொத்தானைப் போல நான் பயன்படுத்த முடிந்தது, அணியின் வெற்றிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்ய நான் எவ்வளவு கடினமாக பயிற்சி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது. எனது விளையாட்டில் அதிக ஆற்றலைச் சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
லாக் டவுன் காலத்தில் எனது முந்தைய விளையாட்டுகளின் அனைத்து காட்சிகளையும் மிக நெருக்கமாகப் பார்த்தேன். நான் வேலை செய்ய வேண்டிய அனைத்து நுட்பங்களையும் பற்றி எனக்கு ஒரு நியாயமான யோசனை கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story