கொரோனா பாதிப்பு எதிரொலி: 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் ஒத்திவைப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக, 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் முதல்முறையாக 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானேவில் வருகிற செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்திருந்திருந்தது.
மேலும் 5 பேர் கொண்ட ஆக்கி உலகக் கோப்பை தொடரை அறிமுகப்படுத்தி வைப்பதன் மூலம் சர்வதேச ரீதியாக ஆக்கி விளையாட்டை மேலும் முன்னேற்ற முடியும் என்பதுடன், பிரசித்திப் பெறவைக்க முடியும் என்றும் ஆக்கி விளையாட்டில் முன்னிலையில் உள்ள அணிகளைத் தவிரவும், வளர்ந்துவரும் அணிகளையும் ஐந்து பேர் கொண்ட உலகக் கோப்பை தகுதி காண போட்டிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்திருந்தது.
Related Tags :
Next Story