ஒலிம்பிக் ஆக்கி போட்டி: நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வி


ஒலிம்பிக் ஆக்கி போட்டி: நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வி
x
தினத்தந்தி 24 July 2021 4:18 PM GMT (Updated: 24 July 2021 4:18 PM GMT)

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வியடைந்தது.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா 3 -1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய ஆண்கள் அணிக்கான காலிறுதிப்போட்டி நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வியடைந்தது. முன்னதாக இந்த போட்டியில் தொடக்கம் முதலே நெதர்லாந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய அந்த அணி, முதல் கோல் அடித்து 1-0 என்று முன்னிலை பெற்றது. இதனையடுத்து வேகமெடுத்த இந்திய அணியில் ராணி ராம்பால் ஒரு கோலை அடித்து 1 - 1 என புள்ளிகளை சமநிலை படுத்தினார்.

இதன் பின்னர் சிறிது நேரத்திற்கு இரண்டு அணிகளுமே தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. பின்னர் நெதர்லாந்து அணிக்கு மீண்டும் கிடைத்த ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி 2வது கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து அந்த அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடிக்க, இறுதியில் 5-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

Next Story