ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை : நடுவர் மற்றும் மருத்துவ குழுவில் இந்திய அதிகாரிகள்...!
இந்தியாவின் சோனியா பத்லா இந்த உலக கோப்பை தொடரில் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா,
15 வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.16 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை சேர்ந்த 4 அதிகாரிகள் பல்வேறு உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவின் கர்னல் பிபு கல்யாண் நாயக் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை தவிர இந்தியாவின் ரகு பிரசாத் மற்றும் ஜாவேத் ஷேக் ஆகியோர் இந்த தொடரின் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் சோனியா பத்லா இந்த உலக கோப்பை தொடரில் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story