சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன்


சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன்
x
தினத்தந்தி 5 March 2018 11:15 PM GMT (Updated: 5 March 2018 9:13 PM GMT)

மாஸ்கோவில் நடந்த சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மாஸ்கோ,

தல் மெமோரியல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பான்ட்டை சந்தித்தார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 9 சுற்றுகள் முடிவில் ஆனந்த் 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 3-வது சுற்றில் ஆனந்த், அஜர்பைஜான் வீரர் ஷகாரியாரிடம் மட்டும் தோல்வி கண்டார். ஷகாரியார் (ரஷியா), கர்ஜாகின் (ரஷியா), நகமுரா (அமெரிக்கா) ஆகியோர் 5 புள்ளிகளுடன் முறையே 2 முதல் 4 இடங்களை பிடித்தனர்.

Next Story