ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி


ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி
x
தினத்தந்தி 17 March 2018 9:48 PM GMT (Updated: 17 March 2018 9:48 PM GMT)

ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய், சீனாவின் ஹூவாங் யூசியாங்கை எதிர்கொண்டார். 77 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பிரனாய் 22–20, 16–21, 21–23 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.பெண்கள் ஒ

பர்மிங்காம்,

ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய், சீனாவின் ஹூவாங் யூசியாங்கை எதிர்கொண்டார். 77 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பிரனாய் 22–20, 16–21, 21–23 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு வந்திருக்கிறார். அவரைத் தவிர மற்ற அனைத்து இந்தியர்களும் தோற்று வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story