டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் இந்திய அணிகள் வெற்றி


டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் இந்திய அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 5 April 2018 11:00 PM GMT (Updated: 5 April 2018 9:05 PM GMT)

டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மிண்டனில் இந்திய அணிகள் வெற்றிபெற்றது.

கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் டிரினிடாட் மற்றும் டொபாக்கோவையும், 2-வது ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து அணியையும் 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இதில் இந்திய பெண்கள் அணி முதல் லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் வேல்ஸ் அணியையும் வென்றது.

பேட்மிண்டன் போட்டியில் அணிகள் பிரிவில் இந்திய அணி அடுத்தடுத்து 2 வெற்றிகளை தனதாக்கியது. ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இலங்கையையும், 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் விரட்டியடித்தது.

ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட இந்திய வீராங்கனைகள் தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று முன்னேறினார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சந்து ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள். மற்றொரு இந்திய வீரர் விக்ரம் மல்கோத்ரா 2-வது சுற்றில் வெற்றி கண்டு கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

Next Story