நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி


நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 2 May 2018 10:45 PM GMT (Updated: 2 May 2018 8:12 PM GMT)

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து,

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-11, 21-19 என்ற நேர்செட்டில் மிஷா ஜில்பெர்மானை (இஸ்ரேல்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-8, 21-10 என்ற நேர்செட்டில் இந்தோனேஷிய வீரர் சோனி குன்கோரோவை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-23, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் சீனதைபே வீரர் ஹூ ஜென் ஹாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீரர் சவுரப் வர்மா தோல்வி கண்டு வெளியேறினார்.

Next Story