‘நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்’ பி.வி.சிந்து நம்பிக்கை
சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
ஐதராபாத்,
நானும், கரோலினா மரினும் நல்ல தோழிகள். ஆனால் களம் இறங்கி விட்டால் வேறு விதமாக மாறி விடுவோம். அதன் பிறகு ஆட்டத்தின் மீது தான் கவனம் இருக்கும். இறுதி சுற்று முடிந்ததும் அவர் என்னை கட்டித்தழுவியது மகிழ்ச்சி அளித்தது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிப்பேன். நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்.
வருகிற 18-ந்தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்க உள்ளது. இந்த முறை பேட்மிண்டனில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் கிடைத்த நம்பிக்கையை ஆசிய போட்டிக்கு எடுத்து செல்ல முடியும். ஆசிய விளையாட்டுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளதால், உடனடியாக நான் பயிற்சியை தொடங்க வேண்டும். இவ்வாறு சிந்து கூறினார்.
உலக பேட்மிண்டனில் அவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். தாயகம் திரும்பிய 23 வயதான பி.வி.சிந்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும், கரோலினா மரினும் நல்ல தோழிகள். ஆனால் களம் இறங்கி விட்டால் வேறு விதமாக மாறி விடுவோம். அதன் பிறகு ஆட்டத்தின் மீது தான் கவனம் இருக்கும். இறுதி சுற்று முடிந்ததும் அவர் என்னை கட்டித்தழுவியது மகிழ்ச்சி அளித்தது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிப்பேன். நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்.
வருகிற 18-ந்தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்க உள்ளது. இந்த முறை பேட்மிண்டனில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் கிடைத்த நம்பிக்கையை ஆசிய போட்டிக்கு எடுத்து செல்ல முடியும். ஆசிய விளையாட்டுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளதால், உடனடியாக நான் பயிற்சியை தொடங்க வேண்டும். இவ்வாறு சிந்து கூறினார்.
Related Tags :
Next Story