ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது
ஜகார்தா
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.
இன்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம் வென்று உள்ளது.ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது. இறுதிப்போட்டியில் ஈரான் அணியிடம் 24-க்கு 27 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.
Related Tags :
Next Story