டேபிள் டென்னிஸ்: ஜிம்கானா கிளப் வீரர் ‘சாம்பியன்’


டேபிள் டென்னிஸ்: ஜிம்கானா கிளப் வீரர் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 5 Sep 2018 10:15 PM GMT (Updated: 5 Sep 2018 7:08 PM GMT)

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை,

மெட்ராஸ் ஜிம்கானா கிளப் சார்பில் கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் 11-5, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஆந்திரா கிளப் வீரர் சாய் தினேஷ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன் இரட்டையர் பிரிவில் ஷரண் ஸ்ரீதர்-சி.என்.ஸ்ரீதர் (ஜிம்கானா கிளப்) ஜோடி 11-5, 12-10, 11-5 என்ற செட் கணக்கில் எம்.ஏ.ஆர்யா-எம்.எஸ்.ஆதித்யா (மைலாப்பூர் கிளப்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வித்யா ராமச்சந்திரனும் (மைலாப்பூர் கிளப்), வெட்ரன்ஸ் ஒற்றையர் பிரிவில் ஜேக்கப் ராஜ்குமாரும் (டி.என்.சி.ஏ. கிளப்) வெற்றி பெற்றனர்.

Next Story