தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி


தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி
x
தினத்தந்தி 25 Sep 2018 12:36 PM GMT (Updated: 25 Sep 2018 12:36 PM GMT)

தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

புதுடெல்லி,

தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது.

இந்த விழாவில் தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தடகள வீராங்கனை ஹிமா தாசு, ஸ்ரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று தடகள மாற்று திறனாளி வீரர் அன்குர் தமா அர்ஜுனா விருது பெற்றார்.  அவர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று ஜனாதிபதி விருதினை வழங்கினார்.


Next Story