உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா


உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 8:34 PM GMT)

இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா அரைஇறுதியில் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை (கியூபா) 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ரோமன் அஷாரினையும் (ஹங்கேரி), 2-வது சுற்றில் லீ சியங்கையும் (தென்கொரியா), கால்இறுதியில் துல்கா துமர் ஒசிரையும் (மங்கோலியா) விரட்டினார். அதைத் தொடர்ந்து அரைஇறுதியில் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை (கியூபா) 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியனான பஜ்ரங் பூனியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Next Story