புரோ கபடி: மும்பை அணி ‘திரில்’ வெற்றி
12 அணிகள் இடையிலான 6–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
பாட்னா,
12 அணிகள் இடையிலான 6–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான 36–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா) 40–39 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. 7–வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 5–வது வெற்றியாகும். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 39–28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வென்றது. இன்றைய ஆட்டங்களில் டெல்லி–உ.பி.யோத்தா (இரவு 8 மணி), பாட்னா–அரியானா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story