புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் அணிகள் வெற்றி


புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 30 Oct 2018 10:45 PM GMT (Updated: 30 Oct 2018 8:00 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில், தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் குஜராத் அணிகள் வெற்றிபெற்றன.

பாட்னா,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பாதியில் 16-12 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற குஜராத் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டு 37-27 என்ற புள்ளி கணக்கில் புனேயை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 6 புள்ளிகளை எடுத்த புனே அணியின் நட்சத்திர வீரர் நிதின் தோமர், இந்த சீசனில் 100 ரைடு புள்ளிகளை (மொத்தம் 102 புள்ளி) கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 11-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 53-32 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4-வது வெற்றியை சுவைத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியில், ரைடு செல்வதில் கில்லாடியான ராகுல் சவுத்ரி 17 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.

இன்றைய லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி-புனேரி பால்டன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story