புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே


புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே
x
தினத்தந்தி 13 Nov 2018 9:30 PM GMT (Updated: 13 Nov 2018 7:51 PM GMT)

புரோ கபடி போட்டியில், தெலுங்கு டைட்டன்சிடம் புனே அணி தோல்வியடைந்தது.

மும்பை,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 60-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 28-25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. 20 முறை ரைடுக்கு சென்று 8 புள்ளிகள் எடுத்த டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரி, தங்களது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா (மும்பை அணி) அணி 41-24 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்றது.

மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story