மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகள் நாளை மறுநாள் தேர்வு


மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகள் நாளை மறுநாள் தேர்வு
x
தினத்தந்தி 28 Nov 2018 9:30 PM GMT (Updated: 28 Nov 2018 7:15 PM GMT)

மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகள், நாளை மறுநாள் தேர்வு செய்யப்பட உள்ளது.

சென்னை,

44-வது மாநில ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சேலம் மேட்டுபட்டியில் வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (1-ந் தேதி) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 1-1-2001-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story