உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்


உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்
x
தினத்தந்தி 16 Dec 2018 6:27 AM GMT (Updated: 16 Dec 2018 6:27 AM GMT)

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

குவாங்சோவ்,

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று  நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்  தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானைச்சேர்ந்த உலகின் 7 ஆம் நிலை வீராங்கனையான நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய வீராங்கனை பிவி சிந்து, 21-19, 21-17 என்ற கணக்கில் நஜோமி ஒகுஹராவை  வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 


Next Story