சென்னை செஸ்: திவ்யாவுக்கு இரட்டை வெற்றி


சென்னை செஸ்: திவ்யாவுக்கு இரட்டை வெற்றி
x
தினத்தந்தி 2 Feb 2019 9:59 PM GMT (Updated: 2 Feb 2019 9:59 PM GMT)

சென்னையில் நடந்த செஸ் போட்டியில் திவ்யாவுக்கு இரட்டை வெற்றி கிடைத்தது.

சென்னை,

பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் செஸ் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் நேற்று நடந்த 8-வது சுற்றில் மங்கோலியாவின் உட்சாய்க்கையும், 9-வது சுற்றில் உக்ரைனின் பாபி ஒல்காவை 92-வது காய் நகர்த்தலிலும் வீழ்த்தினார். இன்னும் 2 சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் திவ்யா 7 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மிட்செல் கேத்தரினா, உக்ரைனின் ஒஸ்மாக் லுல்ஜா ஆகியோர் தலா 6.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

Next Story