புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:30 PM GMT (Updated: 19 Feb 2019 10:12 PM GMT)

புரோ கைப்பந்து லீக் போட்டியில், கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி (மும்பை) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-12, 15-9, 16-14 என்ற நேர்செட்டில் மும்பை அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட கோழிக்கோடு அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. கொச்சி அணி லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. அதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story