துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 28 Feb 2019 9:30 PM GMT (Updated: 28 Feb 2019 8:54 PM GMT)

‘இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடிய போது அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அது மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், சர்ச்சைகள் தன்னை மேலும் பணிவான மனிதராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

* 41-வது தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி புவனேஸ்வரத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் தமிழக அணி 22-25, 16-25, 26-24, 25-19, 10-15 என்ற செட் கணக்கில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-23, 20-25, 16-25, 16-25 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு 4-வது இடத்தை பெற்றது.

* ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் பேட்டிங்கில் முன்வரிசையில் இறங்கினால் நன்றாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

* ‘இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடிய போது அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அது மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், சர்ச்சைகள் தன்னை மேலும் பணிவான மனிதராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

* சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், தமிழக அணி (பி பிரிவு) நேற்று விதர்பாவை சூரத்தில் எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த விதர்பா அணி 9 விக்கெட்டுக்கு 141 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது. முரளிவிஜய் 74 ரன்களும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜே.கவுசிக் 41 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

Next Story