துளிகள்


துளிகள்
x

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர், ஐ.சி.சி. சேர்மன் ஷசாங் மனோகரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.


* பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாளத்தில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை பந்தாடி அரைஇறுதிக்கு முன்னேறியது.

*இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர், ஐ.சி.சி. சேர்மன் ஷசாங் மனோகரை மும்பையில் இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

*ஹாங்காங்கில் நடந்த ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் மகேஷ் வெள்ளிப்பதக்கம் (1 நிமிடம் 51.48 வினாடி) வென்றார். இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

Next Story