இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகினார், சாய்னா


இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகினார், சாய்னா
x
தினத்தந்தி 20 March 2019 10:15 PM GMT (Updated: 20 March 2019 9:35 PM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகி உள்ளார்.

புதுடெல்லி,

மொத்தம் ரூ.2.4 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி வருகிற 26-ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் கால்இறுதியின் போது வயிற்று கோளாறினால் துடித்து போன சாய்னா நேவால் அதன் பிறகு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்திய ஓபனில் தன்னால் ஆட இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Next Story