துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 23 April 2019 11:12 PM GMT (Updated: 23 April 2019 11:12 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது.


* உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 14-12, 11-5, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரியா டோரோவிச்சை (செர்பியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 502-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சுதித்ரா முகர்ஜி 8-11, 17-15, 11-9, 5-11, 6-11, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் 58-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் சபின் வின்டருக்கு அதிர்ச்சி அளித்தார். அதேசமயம் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சச்சின்-சரத் கமல் ஜோடி, ஈரானின் நிமா-நோஷன் இணையிடம் தோற்று வெளியேறியது.

* லோதா கமிட்டி சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் கோர்ட்டுக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள வக்கீல் நரசிம்மா டெல்லியில் இன்று மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். கிரிக்கெட் போட்டிகளை நடத்துதல் உள்ளிட்ட நிர்வாக செலவினங்களுக்கான மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு போதிய நிதியை, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. தோல்வி எதிரொலியாக, ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவை நீக்கம் செய்தது போல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை நீக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் காலிஸ்சிடம் கேட்ட போது, ‘கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக்கை நீக்குவது குறித்து நாங்கள் எதுவும் ஆலோசிக்கவில்லை. இந்த விஷயம் விவாதத்துக்கும் எடுத்து கொள்ளப்படவில்லை’ என்றார்.


Next Story