துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 21 May 2019 9:45 PM GMT (Updated: 21 May 2019 8:02 PM GMT)

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.


* பார்முலா1 கார்பந்தயத்தில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஆஸ்திரியாவை சேர்ந்த நிகி லாதா (வயது 70) நுரையீரல் நோய் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

* சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் ‘1 டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி அடைந்தது.

* இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தியாவின் மேரிகோம் 5-0 என்ற கணக்கில் நேபாளத்தின் மாலாராயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதி செய்தார்.


Next Story