குத்துச்சண்டை: அரைஇறுதியில் ஷிவதபா


குத்துச்சண்டை: அரைஇறுதியில் ஷிவதபா
x
தினத்தந்தி 22 May 2019 10:56 PM GMT (Updated: 22 May 2019 10:56 PM GMT)

குத்துச்சண்டை போட்டியின் அரைஇறுதிக்கு ஷிவதபா முன்னேறினார்.

கவுகாத்தி,

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் மொரிஷியஸ் வீரர் ஹெலென் டாமியனை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். இதேபிரிவில் இந்திய வீரர்கள் அங்கித், மனிஷ் கவுசிக் ஆகியோரும் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

Next Story