இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்


இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 24 May 2019 11:29 PM GMT (Updated: 24 May 2019 11:29 PM GMT)

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்.

கவுகாத்தி,

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பந்தயங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்தியா மொத்தம் 12 தங்கப்பதக்கங்களை அள்ளியது. 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிசுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீராங்கனை சரிதாதேவி (60 கிலோ) 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சரிதாதேவி கடந்த 3 ஆண்டுகளில் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இதே போல் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் மனிஷ் கவுசிக்கை வென்றார்.

Next Story