மாநில சீனியர் தடகள போட்டி திருச்சியில் நாளை தொடக்கம்


மாநில சீனியர் தடகள போட்டி திருச்சியில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2019 9:45 PM GMT (Updated: 20 Jun 2019 9:39 PM GMT)

92–வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் உள்ள அண்ணா ஸ்டேடியத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

சென்னை, 

92–வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் உள்ள அண்ணா ஸ்டேடியத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, அரைஸ்ஸ்டீல் கிளப், எஸ்.டி.ஏ.டி. உள்பட பல்வேறு கிளப் மற்றும் அமைப்புகளை சேர்ந்த சுமார் 1,500 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 23 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.


Next Story