மாற்று திறனாளிகளுக்கான தேசிய சீனியர் கைப்பந்து - சென்னையில் நாளை தொடக்கம்


மாற்று திறனாளிகளுக்கான தேசிய சீனியர் கைப்பந்து - சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 24 July 2019 11:40 PM GMT (Updated: 24 July 2019 11:40 PM GMT)

மாற்று திறனாளிகளுக்கான தேசிய சீனியர் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்க உள்ளன.

சென்னை,

மாற்று திறனாளிகளுக்கான 8-வது தேசிய சீனியர் கைப்பந்து மற்றும் 12-வது தேசிய வீல்சேர் வாள்சண்டை போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், குஜராத், ராஜஸ்தான் உள்பட 20 மாநிலங்களை சேர்ந்த 525 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் இருந்து அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் உலக போட்டிக்கான இந்திய பாரா கைப்பந்து அணிகள் தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை பாரா ஒலிம்பிக் கைப்பந்து சம்மேளன தலைவர் எச்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Next Story