புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ந்து 4-வது தோல்வி


புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ந்து 4-வது தோல்வி
x
தினத்தந்தி 26 July 2019 11:38 PM GMT (Updated: 26 July 2019 11:38 PM GMT)

புரோ கபடி போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ந்து 4-வது தோல்வியை சந்தித்தது.

ஐதராபாத்,

7-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணி 44-19 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 34-22 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இந்த சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத தெலுங்கு டைட்டன்ஸ் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். மும்பையில் இன்று நடக்கும் ஆட்டங்களில் யு மும்பா-புனேரி பால்டன் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story