காமன்வெல்த் போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதலை நீக்கியது நியாயமற்றது மல்யுத்த வீராங்கனை சாக்ஷிமாலிக் கருத்து


காமன்வெல்த் போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதலை நீக்கியது நியாயமற்றது மல்யுத்த வீராங்கனை சாக்ஷிமாலிக் கருத்து
x
தினத்தந்தி 30 July 2019 9:30 PM GMT (Updated: 30 July 2019 8:16 PM GMT)

2022–ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நொய்டா, 

2022–ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்க்கப்படாவிட்டால் அந்த போட்டியில் இருந்து விலக அனுமதிக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கருத்து தெரிவிக்கையில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கி இருப்பது நியாயமற்றது. அதற்காக போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது சரியானதாக இருக்காது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்க்கப்படும் என்று நம்புகிறேன். எந்தவொரு பந்தயம் போட்டியில் இருந்து நீக்கப்பட்டாலும் அந்த போட்டிக்கான வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். துப்பாக்கி சுடுதலை போட்டியில் சேர்க்க இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானது தான். ஒட்டுமொத்த இந்திய அணியில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் அது நியாயமற்றது. சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கும் பரிசுத்தொகையை அரியானா அரசு குறைத்து இருப்பது தவறானதாகும். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்’ என்றார்.


Next Story