புரோ கபடி: டெல்லியை வீழ்த்தியது அரியானா


புரோ கபடி: டெல்லியை வீழ்த்தியது அரியானா
x
தினத்தந்தி 7 Sep 2019 11:53 PM GMT (Updated: 7 Sep 2019 11:53 PM GMT)

புரோ கபடி போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி போட்டியில், கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 79-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 47-25 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்றது. பெங்கால் வாரியர்ஸ் - குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே, தமிழ் தலைவாஸ் அணியின் (13 ஆட்டத்தில் 3 வெற்றி, 8 தோல்வி, 2 டை என்று 27 புள்ளியுடன் 11-வது இடம்) மோசமான செயல்பாடு எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக கேரளாவை சேர்ந்த உதயகுமார் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Next Story