புரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி


புரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி
x
தினத்தந்தி 10 Sep 2019 11:35 PM GMT (Updated: 10 Sep 2019 11:35 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியில், மும்பை அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை அணிகள் சந்தித்தன. ஆட்டத்தின் தொடக்கத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்து அதிர்ச்சி கொடுத்தது. ஆட்டத்தின் முதற்பாதியில் 15-15 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன. ஆட்டத்தின் பிற்பாதியில் அதிரடி காட்டிய மும்பை அணி, தெலுங்கு டைட்டன்சை 3 முறை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி நெருக்கடி கொடுத்தாலும் வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவில் மும்பை அணி 41-27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. 14-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 7-வது வெற்றியை பெற்றது. 14-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-மும்பை (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story