புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது


புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது
x
தினத்தந்தி 10 Sep 2019 11:39 PM GMT (Updated: 10 Sep 2019 11:39 PM GMT)

புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதியை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதன்படி ஆமதாபாத்தில் அக்டோபர் 14-ந் தேதி 2 வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடக்கிறது. முதலாவது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது, 6-வது இடம் பிடிக்கும் அணிகளும், 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 4-வது, 5-வது இடம் பிடிக்கும் அணிகளும் மோதும். ஆமதாபாத்தில் அக்டோபர் 16-ந் தேதி 2 அரைஇறுதிப்போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெறும் அணியும், முதலாவது வெளியேற்றுதல் சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணியும், இரண்டாவது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெறும் அணியும், 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியும் சந்திக்கும். இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் அக்டோபர் 19-ந் தேதி நடக்கிறது.

Next Story