உலக கோப்பை கூடைப்பந்து: ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்


உலக கோப்பை கூடைப்பந்து: ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 Sep 2019 11:30 PM GMT (Updated: 11 Sep 2019 11:30 PM GMT)

உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

ஷாங்காய்,

18-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி 82-70 என்ற புள்ளி கணக்கில் செக்குடியரசு அணியை வீழ்த்தி முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, நடப்பு சாம்பியன் அமெரிக்காவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 89-79 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா-பிரான்ஸ், ஸ்பெயின்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Next Story