உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:59 PM GMT (Updated: 14 Sep 2019 10:59 PM GMT)

உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட ஆசிய சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால், சீன தைபேயின் துபோ வெய்யை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக குத்துகளை விட்ட அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுஷிக் 5-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வீரர் என்ரிகோ லாக்ரசை வீழ்த்தினார்.


Next Story