புரோ கபடி லீக்: அரியானா அணி 11-வது வெற்றி


புரோ கபடி லீக்: அரியானா அணி 11-வது வெற்றி
x
தினத்தந்தி 23 Sep 2019 11:27 PM GMT (Updated: 23 Sep 2019 11:27 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில், அரியானா அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.

ஜெய்ப்பூர்,

7-வது புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த 104-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அரியானா அணி முதல் பாதியில் ஒரு முறையும், 2-வது பாதியில் ஒரு முறையும் பாட்னா அணியை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. முடிவில் அரியானா அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. 17-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி 11-வது வெற்றியை பெற்றது. 18-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணி 11-வது தோல்வியை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தால் ஆட்டத்தில் இறுதி வரை அனல் பறந்தது. முடிவில் இந்த ஆட்டம் 39-39 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story