இந்திய வீராங்கனை தேஜஸ்வினி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


இந்திய வீராங்கனை தேஜஸ்வினி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 9 Nov 2019 11:52 PM GMT (Updated: 9 Nov 2019 11:52 PM GMT)

இந்திய வீராங்கனை தேஜஸ்வினி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.

தோகா,

14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் தகுதி சுற்றில் 1,171 புள்ளிகள் குவித்து 5-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 8 பேரில் 5 வீராங்கனைகள் ஏற்கனவே அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால், தேஜஸ்வினி சவாந்த் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் தேஜஸ்வினி சவாந்த் 435.8 புள்ளிகள் பெற்று 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை தவறவிட்டார். ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 12-வது கோட்டா இதுவாகும். 39 வயதான தேஜஸ்வினி சவாந்த் 2010-ம் ஆண்டு நடந்த உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.


Next Story