ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்


ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:25 PM GMT (Updated: 3 Dec 2019 10:25 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


* இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 41 முறை சாம்பியனான மும்பை அணி தனது முதலாவது லீக்கில் பரோடோவை வருகிற 9-ந்தேதி வதோதராவில் சந்திக்கிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாத சமயங்களில் தவால் குல்கர்னி கேப்டனாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது டெஸ்ட் போட்டிகள் இல்லாததால் அஜிங்யா ரஹானே மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல் ஊக்கமருந்து சர்ச்சையால் 8 மாதங்கள் தடையை அனுபவித்த இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கும் இடம் கிடைத்துள்ளது.

* டெல்லியில் அண்மையில் நடந்த தேசிய அளவிலான வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஆர்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அவர் ஆசிய வலுதூக்குதல் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் 16 வயதான நயீம் ஷாவை தேசிய அணியில் இருந்து விடுவிக்கும்படியும், அவர் ஜூனியர் உலககோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணிக்கு தேவை என்றும் ஜூனியர் அணியின் பயிற்சியாளர் இஜாஸ் அகமது வலியுறுத்தியுள்ளார்.


Next Story