பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்திருந்த சீருடை நேற்று ஏலம் விடப்பட்டது


பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்திருந்த சீருடை நேற்று ஏலம் விடப்பட்டது
x
தினத்தந்தி 6 Dec 2019 11:42 PM GMT (Updated: 6 Dec 2019 11:42 PM GMT)

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, அணிந்திருந்த சீருடை இத்தாலியில் நேற்று ஏலம் விடப்பட்டது.


* சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

* பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, தங்கள் நாட்டு அணிக்காக கடைசியாக பங்கேற்ற சர்வதேச போட்டியின் போது (1971-ம் ஆண்டு ஆடினார்) அணிந்திருந்த சீருடை இத்தாலியில் நேற்று ஏலம் விடப்பட்டது. அந்த உடை ரூ.23 லட்சத்திற்கு ஏலம் போனது.

* நிர்வாகத்தை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி தபாங் மோரே இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Next Story