சென்னை மாவட்ட சப்-ஜூனியர் கபடி போட்டி - நாளை நடக்கிறது


சென்னை மாவட்ட சப்-ஜூனியர் கபடி போட்டி - நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 20 Dec 2019 11:39 PM GMT (Updated: 20 Dec 2019 11:39 PM GMT)

சென்னை மாவட்ட சப்-ஜூனியர் கபடி போட்டி, நாளை நடக்க உள்ளது.

சென்னை,

31-வது சென்னை மாவட்ட சப்-ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா சீனியர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 ஆயிரமும், 3-வது, 4-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் 16 வயதுக்குட்பட்டும், 55 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்றும் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மாநில போட்டிக்கான சென்னை மாவட்ட சப்-ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story