ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி


ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி
x
தினத்தந்தி 15 Feb 2020 10:38 PM GMT (Updated: 15 Feb 2020 10:38 PM GMT)

ஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது.

மணிலா,

நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் வலுவான இந்தோனேஷியாவிடம் தோல்வி அடைந்தது. தோல்வி கண்ட இந்திய அணி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. ஆசிய போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் ஐதராபாத்தில் நடந்த ஆசிய போட்டியில் வெண்கலம் வென்று இருந்தது.

ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத், அந்தோணி ஜின்டிங்க்கு எதிரான ஆட்டத்தில் 6-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-18, 22-20 என்ற நேர்செட்டில் ஆசிய விளையாட்டு போட்டி சாம்பியன் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 10-21, 21-14, 21-23 என்ற செட் கணக்கில் முகமது அஹ்சன்-ஹென்ட்ரா செடியாவான் இணையிடம் வீழ்ந்தது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுபாங்கர் தேவ் 21-17, 21-15 என்ற நேர்செட்டில் ஷிசர் ஹிரென் ருஸ்தாவிடோவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. கடைசி இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-லக்‌ஷயா சென் இணை 6-21, 13-21 என்ற நேர்செட்டில் மார்கஸ் பென்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ ஜோடியிடம் தோல்வி அடைந்ததால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

Next Story