அமெரிக்க தடகள ஜாம்பவான் மரணம்


அமெரிக்க தடகள ஜாம்பவான் மரணம்
x
தினத்தந்தி 1 Jun 2020 2:08 AM GMT (Updated: 1 Jun 2020 2:08 AM GMT)

அமெரிக்க தடகள ஜாம்பவான் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

நியூயார்க், 

அமெரிக்காவின் முன்னாள் ஓட்டப்பந்தய ஜாம்பவான் பாபி மோரோ உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. இவர் 1956-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 ஜ் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அவர் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். ஒரே ஒலிம்பிக்கில் இந்த மூன்று பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்ற 4 வீரர்களில் பாபி மோரோவும் ஒருவர். அமெரிக்காவின் ஜெசி ஓவன்ஸ், கார்ல் லீவிஸ், ஜமைக்காவின் உசேன் போல்ட் ஆகியோரும் இச்சாதனை பட்டியலில் உள்ளனர். 1956-ம் ஆண்டில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட பாபி மோரோ தனது காலத்தில் 11 உலக சாதனைகளை படைத்திருந்தார்.

Next Story